தமிழக செய்திகள்

திருச்செந்தூர் கோவிலில் உண்டியல் வருமானம் ரூ.5¼ கோடி

திருச்செந்தூர் கோவிலில் 1.9 கிலோ தங்கம், 72 கிலோ வெள்ளியும் காணிக்கையாக கிடைத்தது.

தினத்தந்தி

திருச்செந்தூர்,

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் செலுத்தும் உண்டியல் காணிக்கை மாதந்தோறும் எண்ணப்படுகிறது. அதன்படி கோவிலில் பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை எண்ணும் பணி கடந்த 2 நாட்கள் நடந்தது. கோவில் தக்கார் அருள்முருகன் தலைமை தாங்கினார். இணை ஆணையர் ராமு முன்னிலையில் தன்னார்வலர்கள், கோவில் பணியாளர்கள் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.

இதில் மொத்தம் ரூ.5 கோடியே 28 லட்சத்து 4 ஆயிரத்து 38-ஐ பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.மேலும் 1 கிலோ 905 கிராம் தங்கமும், 72 கிலோ 225 கிராம் வெள்ளி பொருட்களையும், 1,922 வெளிநாட்டு பண நோட்டுகளும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர். 

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்