திருவள்ளூர்,
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த பெத்திக்குப்பம் பகுதியில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மருமகனுக்கு சொந்தமான திருமண மண்டபம் ஒன்று உள்ளது.
அந்த திருமண மண்டபத்தில் 13-ந்தேதி நடைபெற்ற திருமணவிழா வரவேற்பு நிகழ்ச்சியின் போது கேட்டரிங் பணியில் ஈடுபட்டிருந்த இளைஞர்கள் கீழ் தளத்தில் இருந்து மேல்தளத்திற்கு உணவு எடுத்துக்கொண்டு வந்தனர். அப்போது லிஃப்ட் அறுந்து விழுந்து விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் லிஃப்டுக்குள் இருந்த 11-ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் 2 இளைஞர்கள் காயமடைந்தனர்.
இந்த நிலையில் இந்த விபத்து தொடர்பாக திருமண மண்டப மேலாளர் திருநாவுக்கரசு, மேற்பார்வையாளர் வெங்கடேசன், லிஃப்ட் ஆபரேட்டர் கக்கன் ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்து மாஜிஸ்திரேட் முன்பு போலீசார் ஆஜர்படுத்தினர். இதனையடுத்து கைது செய்யப்பட்ட 3 பேரையும் வரும் 27 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க மேஜிஸ்திரேட் மோகனப்ரியா உத்தரவிட்டுள்ளார்.