தமிழக செய்திகள்

தேசூர் அருகே கொக்கு சுட முயன்றவர் படுகாயம்.. உரிமம் இல்லாத நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்த போலீஸ்

காயமடைந்த நபர் பயன்படுத்திய உரிமம் இல்லாத நாட்டு துப்பாக்கியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தினத்தந்தி

சேத்துப்பட்டு:

திருவண்ணாமலை மாவட்டம் தேசூர் அருகே உள்ள பருவதம்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள் (வயது 35). விவசாயியான இவர், சம்பவத்தன்று கொக்கை சுட முயன்றபோது துப்பாக்கியில் இருந்து பாய்ந்த தோட்டா எதிர்பாராதவிதமாக அவரது தொடையில் பாய்ந்தது.

இதில் படுகாயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையிலும், பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உரிமம் இல்லாத நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். மேலும் பெருமாள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து