தமிழக செய்திகள்

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி ரூ. 4,100 கோடி கணக்கு காட்டவில்லை - வருமானவரித்துறை பரபரப்பு விளக்கம்

வருமானவரித்துறையினர் மெர்கண்டைல் வங்கியில் நடத்தப்பட்ட சோதனை தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

தினத்தந்தி

சென்னை,

வருமானவரித்துறையினர் கடந்த செவ்வாய்கிழமை காலை முதல் இரவு வரை தூத்துக்குடியை தலைமையிடமாக கொண்டு செய்லபட கூடிய தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் சோதனை மேற்கொண்டனர்.

சோதனைக்கு பின்னர் இன்று வருமானவரித்துறையினர் மெர்கண்டைல் வங்கியில் நடத்தப்பட்ட சோதனை தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

இதில் தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் ரூ. 4,100 கோடி அளவுக்கு முறையாக கணக்கு காட்டவில்லை எனவும் , தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் ரூ.500 கோடி பரிவர்த்தனைக்கான எந்த விவரங்களும் கணக்கில் காட்டப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ள்ளது.

கிரெடிட் கார்டு மூலம் மேற்கொள்ளப்பட்ட ரூ.110 கோடிக்கான பரிவர்த்தனை குறித்து வங்கி நிர்வாகம் தகவல் தரவில்லை எனவும் , 10 ஆயிரம் வங்கி கணக்குகளில் ரூ.2,700 கோடி பரிவர்த்தனை தொடர்பான விவரங்களை தரவில்லை எனவும் வருமானவரித்துறை விளக்கமளித்துள்ளது 

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை