தமிழக செய்திகள்

தமிழக சட்டப்பேரவை வரும் -23 ஆம் தேதி கூடுகிறது: சட்டப்பேரவை செயலர் தகவல்

தமிழக சட்டப்பேரவை வரும் 23- ஆம் தேதி கூடும் என்று சட்டப்பேரவை செயலர் ஜமாலுதீன் தெரிவித்துள்ளார்

சென்னை,

தமிழக சட்டப்பேரவை வரும் 23- ஆம் தேதி கூடும் என்று சட்டப்பேரவை செயலர் ஜமாலுதீன் தெரிவித்துள்ளார். காலை 10 மணிக்கு ஆளுநர் உரையுடன் சட்டப்பேரவை கூட்டத்தொடர் துவங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

5 நாட்கள் இந்த கூட்டத்தொடர் நடைபெறுகிறது. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு நடைபெறும் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கூட்டத்தொடரில் மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதாவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று தெரிகிறது.