தமிழக செய்திகள்

தமிழக காவல்துறைக்கு ரூ.8,930.29 கோடி ஒதுக்கீடு; நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

நீதித்துறைக்கு பட்ஜெட்டில் ரூ. 1,713.30 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று தமிழக நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, இன்று சட்டப் பேரவையில் தமிழக அரசின் 2021-22 நிதியாண்டுக்கான முழுமையான திருத்திய நிதிநிலை அறிக்கை (பட்ஜெட் தாக்கல்) இன்று செய்யப்பட்டு வருகிறது. தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார். அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:-

  • தேர்தல் வாக்குறுதியின் படி வேளாண் துறைக்கென தனி பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்படும்.
  • 6 மாதங்களில் வலுவான அடித்தளம் வகையில் பட்ஜெட் திருத்தி அமைக்கப்பட்டுள்ளது.
  • தேர்தல் வாக்குறுதிகள் படிப்படியாக நிறைவேற்றப்படும்
  • ஜிஎஸ்டி வரி செயல்பாட்டில் சிக்கல்கள் உள்ளன.
  • 6 மாதங்களில் வலுவான அடித்தளம் அமைக்கும் வகையில் திருத்திய பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது.
  • திருத்திய வரவுசெலவு அறிக்கை இந்த நிதியாண்டின் எஞ்சிய 6 மாதங்களுக்கு பொருந்தும் .
  • அரசின் கடன்சுமையை சரிசெய்து நிதிநிலைமை மேம்படுத்துவது நாங்கள் அளித்த வாக்குறுதிகளில் ஒன்று.
  • வல்லுநர்களின் கருத்தை பெற்று உரிய முறையில் செயல்படும் வழிமுறைகளை முதல்வர் வகுத்துள்ளார்.
  • தேர்தல் வாக்குறுதியின்படி குடும்ப அட்டைத்தாரர்களுக்கு ரூ.4 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது .
  • தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளுக்கு முன்னுரிமை அளித்து படிப்படியாக நிறைவேற்றுவோம்.
  • ஒரே ஆண்டில் செய்து முடிக்க இயலாத அளவுக்கு பணி மிகக் கடுமையாக உள்ளது.
  • பணிகளை செய்து முடிக்க 2,3 ஆண்டுகள் வரை முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டும்.
  • பட்ஜெட் கூட்டத்தொடர் செப்டம்பர் 21 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
  • அனைத்து பொதுத்துறைகளிலும் மின்னணு அளவீட்டு முறை செயல்படுத்தப்படும்
  • ஆண்டுதோறும் கருணாநிதி செம்மொழி விருது வழங்கப்படும்.
  • தமிழக காவல்துறைக்கு ரூ.8,930.29 கோடி ஒதுக்கீடு.
  • நீதித்துறைக்கு பட்ஜெட்டில் 1,713.30 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • பொது விநியோக திட்டத்தின் கீழ் தேவையான இடங்களில் புதிய நியாய விலைக்கடைகள் அமைக்கப்படும்.
  • தமிழக காவல்துறையில் 14,317 காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்.
  • சாலை பாதுகாப்பு திட்டத்திற்கு பல்வேறு துறைகளுக்காக ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை