தமிழக செய்திகள்

'பிரதமர் தண்ணீருக்கு அடியில் தவம் செய்தாலும் தமிழக மக்கள் பா.ஜ.க.வை ஏற்க மாட்டார்கள்' - அமைச்சர் சேகர் பாபு

நாடாளுமன்ற தேர்தலில் தமிழக மக்கள் பா.ஜ.க.வுக்கு அங்கீகாரம் வழங்க மாட்டார்கள் என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.

தினத்தந்தி

சென்னை,

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில் பிரதமர் மோடி தமிழகத்திற்கு வருகை தருவது குறித்து தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது;-

"பிரதமர் மோடி தண்ணீருக்கு அடியில் சென்று தவம் செய்தாலும், தரை மீதோ அல்லது வான் மார்க்கமாகவோ பயணம் செய்தாலும், நடந்து வந்தாலும், ஓடி வந்தாலும், உருண்டு வந்தாலும் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழக மக்கள் பா.ஜ.க.வுக்கு அங்கீகாரம் வழங்க மாட்டார்கள்.

'இந்தியா' கூட்டணி வலிமையோடு இருக்கிறது. இந்த கூட்டணிக்கு தலைமை தாங்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், எந்த பிரச்சினையையும் எதிர்கொள்ளும் அஞ்சா நெஞ்சத்தோடு செயல்படுகிறார்."

இவ்வாறு அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து