தமிழக செய்திகள்

செயற்கைகோள் உதவியுடன் மணல் கடத்தலை தடுக்க நடவடிக்கை - மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் பேட்டி

‘செயற்கைகோள் உதவியுடன் மணல் கடத்தலை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் கூறினார்.

கோவை,

கோவையை அடுத்த ஆனைக்கட்டி சலீம் அலி பறவைகள் மையத்தில் புதிய ஆராய்ச்சி கூடம் அமைக்கப்பட்டுள்ளது. இதை மத்திய சுற்றுச்சூழல், வனம், காலநிலை மாற்றம் மற்றும் தகவல் ஒலிபரப்புத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் நேற்று திறந்துவைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-