தமிழக செய்திகள்

மூணாறு அருகே மலைப்பாதையில் கவிழ்ந்த சுற்றுலா பஸ்

கட்டுப்பாட்டை இழந்த பஸ் தாறுமாறாக ஓடி மலைப்பாதையில் கவிழ்ந்தது.

தினத்தந்தி

கோழிக்கோடு,

தமிழகத்தில் கோவையில் இருந்து 25 பேருடன் சுற்றுலா பஸ் ஒன்று நேற்று மூணாறு நோக்கி வந்து கொண்டிருந்தது. மூணாறு-உடுமலை சாலையில் தலையார் என்ற பகுதியில் பஸ் வந்து கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த கார் மீது மோதாமல் இருக்க டிரைவர் பஸ்சை திருப்ப முயன்றார்.

இதில் கட்டுப்பாட்டை இழந்த பஸ் தாறுமாறாக ஓடி மலைப்பாதையில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் பஸ்சில் வந்த அனைவரும் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினர். பின்னர் பஸ்சில் சிக்கி இருந்த சுற்றுலா பயணிகளை அக்கம்பக்கத்தினர் மீட்டனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்