தமிழக செய்திகள்

திற்பரப்பு அருவியில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்

திற்பரப்பு அருவியில் சாரல் மழையுடன் குளு குளு என சீசன் நிலவியதால் சுற்றுலா பயணிகள் அருவியில் ஆசை தீரகுளித்து மகிழ்ந்தனர்.

தினத்தந்தி

திருவட்டார்,

குமரி மாவட்ட மலையோரப்பகுதிகளில் தற்போது மழை தொடர்ந்து பெய்து வருவதால் கோதையாற்றில் தண்ணீர் வரத்து சற்று அதிகரித்துள்ளது.இதனால் கோதையாற்றின் குறுக்கே உள்ள திற்பரப்பு அருவியில் பரவலாக தண்ணீர் பாய்கிறது.

இன்று விடுமுறை நாளாததால் இங்கு வருகை தந்த சுற்றுலா பயணிகள் அருவியில் ஆசை தீர குளித்து மகிழ்ந்தனர். மேலும் சிறுவர் நீச்சல் குளத்திலும் குளித்தனர். அருவி எதிரில் உள்ள பூங்கா மற்றும் அலங்கார நீரூற்று ஆகியவற்றைப்பார்த்து ரசித்தனர். அருவியின் மேல் பகுதியில் அணைக்கட்டில் படகு சாவாரி செய்தனர்.

அடிக்கடி சாரல் மழை பெய்தால் அப்பகுதி குளு குளு என உள்ளது. அதிக அளவில் வாகனங்களில் சுற்றுலா பயணிகள் வருகை தந்ததால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் திறபரப்பு பகுதியில் ஏற்பட்டது. ஞாயிற்றுக்கிழமையான நாளை வழக்கத்தை விட அதிகமான சுற்றுலாபயணிகள் வருகை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு