தமிழக செய்திகள்

வியாபாரி கைது

பழனியில் வாட்ஸ் அப் மூலம் இந்து அமைப்பு குறித்து அவதூறு பரப்பிய வியாபாரி கைது செய்யப்பட்டார்.

தினத்தந்தி

பழனி மதினாநகரை சேர்ந்தவர் சாதிக்அலி (வயது 42). பழனி அடிவாரம் பகுதியில் பேன்சி கடை நடத்தி வருகிற இவர், தனது வாட்ஸ்-அப் ஸ்டேட்டசில் பதிவு ஒன்றை பரப்பினார். அதில் தடுப்பூசி போட, ரத்த சோதனை செய்ய சிலர் வீடுகளுக்கு வருவார்கள். அவர்கள் இந்து அமைப்பை சேர்ந்தவர்கள். எனவே அவர்களை விரட்டுங்கள் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் அதில், தமிழக போலீஸ் முத்திரையும் இடப்பட்டிருந்தது போல் இருந்தது. இதுகுறித்து இந்து அமைப்புகள் சார்பில், பழனி டவுன் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து சாதிக்அலியை கைது செய்தனர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு