தமிழக செய்திகள்

அனுமதியின்றி கடையில் பட்டாசுகள் விற்ற வியாபாரி கைது

பொதட்டூர்பேட்டை அருகே அனுமதியின்றி கடையில் பட்டாசுகள் விற்ற வியாபாரியை போலீசார் கைது செய்தனர்.

தினத்தந்தி

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா பொதட்டூர்பேட்டை அருகே அத்திமாஞ்சேரி பேட்டையில் உள்ள பஜார் தெருவில் வசித்து வருபவர் துளசி நரசிம்முலு (வயது 50). இவரது கடையில் அனுமதி இல்லாமல் பட்டாசுகள் இருப்பு வைத்திருந்ததாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதைத் தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ தலைமையில் போலீசார் அந்த கடையில் சென்று திடீர் சோதனை செய்தனர். அப்போது கடையில் எளிதில் தீப்பற்றக்கூடிய பட்டாசு பெட்டிகள் இருப்பு வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. போலீசார் அந்த பட்டாசுகளை பறிமுதல் செய்து வியாபாரி துளசி நரசிம்முலுவை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்