தமிழக செய்திகள்

திருவெண்ணெய்நல்லூர் அருகேலாரி மோதி வியாபாரி பலி

திருவெண்ணெய்நல்லூர் அருகே லாரி மோதி வியாபாரி பரிதாபமாக உயிரிழந்தார்.

தினத்தந்தி

திருவெண்ணெய்நல்லூர், 

திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள பெரியசெவலை செங்கல்ராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலை பகுதியில் வசித்து வந்தவர் ஷான்லால் மகன் வினோத் (வயது 27). வியாபாரியான இவர் மோட்டார் சைக்கிள் மூலம் கிராமம், கிராமமாக சென்று பிளாஸ்டிக் சேர்களை விற்பனை செய்து வந்தார். வினோத் நேற்றுமுன்தினம் கூவாகம் சாலையில் இருந்து பெரியசெவலை நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளுடன் கீழே விழுந்ததில், பலத்த காயமடைந்த வினோத் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து திருவெண்ணெய்நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்