தமிழக செய்திகள்

கள்ளக்குறிச்சி நான்கு முனை சந்திப்பில் ரூ.5½ லட்சத்தில் போக்குவரத்து சிக்னல் கலெக்டர் ஷ்ரவன்குமார் இயக்கி வைத்தார்

கள்ளக்குறிச்சி நான்கு முனை சந்திப்பில் ரூ.5½ லட்சத்தில் போக்குவரத்து சிக்னல் கலெக்டர் ஷ்ரவன்குமார் இயக்கி வைத்தார்

தினத்தந்தி

தியாகதுருகம், 

கள்ளக்குறிச்சி நான்கு முனை சந்திப்பில் ரூ.5 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் போக்குவரத்து சிக்னல் அமைக்கப்பட்டு அதனை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் முன்னிலை வகித்தார். மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் தலைமை தாங்கி போக்குவரத்து சிக்னலை இயக்கி வைத்தார். இதில் துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ், போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் இளையராஜா, போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சத்தியசீலன் மற்றும் போலீசார் பலர் கலந்து கொண்டனர். இதன் மூலம் துருகம் சாலை, சேலம் மெயின் ரோடு, காந்தி ரோடு, கச்சேரி சாலை ஆகிய சாலைகளில் போக்குவரத்து நெரிசலை கட்டுக்குள் கொண்டு வர முடியும் என போக்குவரத்து போலீசார் தெரிவித்தனர். 

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை