தமிழக செய்திகள்

ஊர்க்காவல் படையினருக்கு பயிற்சி நிறைவு விழா

ஊர்க்காவல் படையினருக்கு பயிற்சி நிறைவு விழா நடைபெற்றது.

தினத்தந்தி

அரியலூர் மாவட்ட ஊர்க்காவல் படைக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 34 பேருக்கு உடற்பயிற்சி மற்றும் கவாத்து பயிற்சி ஆகியவை 45 நாட்கள் வழங்கப்பட்டன. பயிற்சி காலம் முடிந்து அவர்கள் பணிக்கு செல்ல உள்ள நிலையில் பயிற்சி நிறைவு விழா அரியலூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா உத்தரவின்படி மாவட்ட ஆயுதப்படை போலீஸ் துணை சூப்பிரண்டு மணவாளன் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பின்னர் போலீசாருடன் இணைந்து நல்ல முறையில் பணியாற்ற வேண்டும் என்று அறிவுரை வழங்கினார். நிகழ்ச்சியில் ஊர்க்காவல் படை வட்டார தளபதி ஜீவானந்தம், அரியலூர் ஆயுதப்படை சப்-இன்ஸ்பெக்டர் குமரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்