தமிழக செய்திகள்

ஆசிரியர்களுக்கு பயிற்சி

மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

பழனி வட்டார கல்வித்துறை சார்பில், ஆசிரியர்களுக்கான கற்றல், கற்பித்தல் பயிற்சி நேற்று நடைபெற்றது. பழனி நகராட்சி பள்ளியில் நடந்த பயிற்சியில் வட்டார கல்வி அலுவலர் ரமேஷ்குமார் கலந்து கொண்டார். இந்த பயிற்சியில் 6 முதல் 10-ம் வகுப்பு வரை உள்ள ஆசிரியர்களுக்கு பாடம் வாரியாக தனித்தனியாக பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் 200-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறும்போது, மாதந்தோறும் ஏதேனும் ஒரு சனிக்கிழமை ஆசிரியர்களுக்கு இந்த பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில் அந்தந்த பாட ஆசிரியர்கள் மொத்தமாக கலந்துகொள்வதால் மாணவர்களுக்கு எவ்வாறு எளிதாக கற்பிப்பது பற்றி கருத்து பரிமாற்றம் கிடைக்கிறது. இதேபோல் எளிதாக பாடங்களை கற்பிக்கவும் பயிற்சி அளிக்கப்படுகிறது என்றனர்.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு