தமிழக செய்திகள்

19 கிராம நிர்வாக அலுவலர்கள் பணியிட மாற்றம்

19 கிராம நிர்வாக அலுவலர்கள் பணியிட மாற்றம்

திருப்பத்தூர் வருவாய் கோட்டாட்சியர் லட்சுமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது.-

திருப்பத்தூர் மற்றும் நாட்றம்பள்ளி தாலுகாவை சேர்ந்த 19 கிராம நிர்வாக அலுவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி திருப்பத்தூர் தாலுகாவுக்கு உட்பட்ட பகுதியில் ராஜீவ்காந்தி (விஷமங்கலம்), ஆதிலட்சுமி (புங்கம்பட்டு நாடு), ராஜா (காக்கங்கரை), சங்கர் கணேஷ் (கட்டேரி), விவேகானந்தன் (கொரட்டி), ஸ்ரீபிரியா (குரும்பேரி), எம்.முருகன் (திருப்பத்தூர் கிராமம்), எம்.பெருமாள் (குனிச்சி), சுரேஷ் (கந்திலி), கார்த்திகேயன் (சு.பள்ளிபட்டு, கசிநாயக்கன்பட்டி), சுந்தரேசன் (உடையாமுத்தூர்), சையத் மஸ்தான் (ஏலகிரி கிராமம்), மகேஷ் (வெங்களாபுரம்), ஜெயசூர்யா (திருப்பத்தூர் நகரம்), எம்.சங்கீதா (பொன்னேரி) ஆகியோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அதேபோல் நாட்டறம்பள்ளி தாலுகாவுக்கு உட்பட்ட பகுதியில் ராஜலட்சுமி (நாட்டறம்பள்ளி), மேகலா (சொரக்காயல்நத்தம்), அனுமந்தன் (குடியானகுப்பம்), சிவன் (வெலக்கல்நத்தம்) ஆகியோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.