தமிழக செய்திகள்

3 துணை போலீஸ் சூப்பிரண்டுகள் இடமாற்றம்

நெல்லை, தென்காசியில் 3 துணை போலீஸ் சூப்பிரண்டுகள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் 3 துணை போலீஸ் சூப்பிரண்டுகள் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். அதன்படி நெல்லை மாவட்ட குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டாக இருந்த பொன்ரகு, நெல்லை மாவட்ட குற்ற ஆவணக்காப்பக துணை போலீஸ் சூப்பிரண்டாகவும், மாவட்ட குற்ற ஆவணக்காப்பக துணை போலீஸ் சூப்பிரண்டு முத்தரசு சென்னை தலைமையிடத்துக்கும் மாற்றம் செய்யப்பட்டார்.

அதேபோல் தென்காசி மாவட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வந்த தனுசியா, நெல்லை மாவட்ட குற்றப்பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டார். அவர் நேற்று காலையில் மாவட்ட குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டாக பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு இன்ஸ்பெக்டர் முத்து உள்ளிட்டவர்கள் வாழ்த்துகள் தெரிவித்தனர்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...