தமிழக செய்திகள்

எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம் தெற்கு ரெயில்வே அறிவிப்பு

விழுப்புரம் பணிமனையில் பராமரிப்பு பணி காரணமாக 28, 30 ஆகிய தேதிகளில் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தினத்தந்தி

சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

* திருச்சி-சென்னை எழும்பூர் சோழன் எக்ஸ்பிரஸ் (வண்டி எண்:16796), 28, 30-ந் தேதிகளில் திருச்சியில் இருந்து காலை 10 மணிக்கு பதிலாக 1 மணி நேரம் 45 நிமிடம் தாமதமாக காலை 11.45 மணிக்கு புறப்படும்.

* மன்னார்குடி-பகத்கி கோதி வாராந்திர எக்ஸ்பிரஸ்(16864), 30-ந் தேதி மன்னார்குடியில் இருந்து மதியம் 12.25 மணிக்கு பதிலாக 1 மணி நேரம் தாமதமாக மதியம் 1.25 மணிக்கு புறப்படும்.

* எழும்பூர்-மதுரை வைகை எக்ஸ்பிரஸ்(12635), 30-ந் தேதி எழும்பூரில் இருந்து மதியம் 1.40 மணிக்கு பதிலாக 1 மணி நேரம் தாமதமாக 2.40 மணிக்கு புறப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு