தமிழக செய்திகள்

திருச்சி: பராமரிப்பு பணிக்கு வந்த வந்தே பாரத் ரெயிலை பூஜை செய்து வரவேற்ற அதிகாரிகள்

திருச்சி பொன்மலை ரெயில்வே பணிமனைக்கு முதன்முறையாக வந்தே பாரத் ரெயில் வந்தது.

தினத்தந்தி

திருச்சி,

திருச்சி பொன்மலை ரெயில்வே பணிமனையில் ரெயில் பெட்டிகளை பழுது நீக்கும் பணி மற்றும் ஊட்டி மலை ரெயில் என்ஜின்கள் தயாரிக்கும் மற்றும் பழுது நீக்கும் பணிகள் உள்ளிட்ட முக்கிய பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இந்த பணிமனைக்கு முதன்முறையாக 16 பெட்டிகள் கொண்ட வந்தே பாரத் ரெயில் பராமரிப்பு பணிக்காக வந்துள்ளது.

கடந்த 2022-ம் ஆண்டு முதல் சென்னையில் இருந்து திருவனந்தபுரத்திற்கு இயக்கப்பட்டு வரும் இந்த ரெயில், தற்போது பராமரிப்பு பணிக்காக இந்த பணிமனைக்கு வந்துள்ளது. இதனை தொடர்ந்து பொன்மலை ரயில்வே பணிமனையின் அதிகாரிகள், தொழிலாளர்கள் பூஜை போட்டு அந்த ரெயிலை வரவேற்றனர். 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை வந்தே பாரத் ரெயிலில் பராமரிப்பு பணி செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது. 

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து