தமிழக செய்திகள்

மதுராந்தகம் அருகே மதுபாட்டில்கள் ஏற்றிச்சென்ற லாரி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து

மதுராந்தகம் அருகே மதுபாட்டில்கள் ஏற்றிச்சென்ற லாரி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

தினத்தந்தி

திருவள்ளூரில் இருந்து விழுப்புரம் நோக்கி மது பாட்டில்களை ஏற்றி கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த லாரி செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தை அடுத்த பாக்கம் என்ற இடத்தில் செல்லும்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் லாரியில் இருந்த மது பாட்டில்கள் பள்ளத்தில் சரிந்தன. இதை பார்த்த அந்த பகுதி மக்கள் மது பாட்டில்களை போட்டிபோட்டு அள்ளிச்சென்றனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மதுராந்தகம் போலீசார், பள்ளத்தில் கவிழ்ந்து கிடந்த லாரியை அப்புறப்படுத்தினர். மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து