தமிழக செய்திகள்

தடுப்புச்சுவரில் லாரி மோதி விபத்து

கடையநல்லூரில் தடுப்புச்சுவரில் லாரி மோதி விபத்துக்குள்ளானது.

தினத்தந்தி

கடையநல்லூர்:

தென்காசி மாவட்டம் சிவகிரியில் இருந்து பால் ஏற்றிக்கொண்டு டேங்கர் லாரி ஒன்று கேரளா மாநிலம் கொல்லத்திற்கு புறப்பட்டது. லாரியை திருவனந்தபுரத்தை சேர்ந்த லிஜூ (வயது 40) என்பவர் ஓட்டினார். நேற்று அதிகாலை 4 மணி அளவில் கடையநல்லூர் போலீஸ் குடியிருப்பு அருகே வந்த போது சாலையின் தடுப்பு சுவரில் மோதி லாரி விபத்துக்குள்ளானது. இதனால் மதுரை- தென்காசி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த கடையநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா மற்றும் போலீசார் லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். எனினும் இந்த விபத்தில் லாரி டிரைவர் காயங்கள் இன்றி உயிர் தப்பினார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்