தமிழக செய்திகள்

சாலையோர பள்ளத்தில் லாரி கவிழ்ந்து விபத்து டிரைவர் படுகாயம்

சாலையோர பள்ளத்தில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் டிரைவர் படுகாயம் அடைந்தார்.

தினத்தந்தி

திருத்தணி, 

காஞ்சீபுரம் மாவட்டம், ஒரகடம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் இரும்பு உதிரி பாகங்களை ஏற்றிக்கொண்டு ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தை நோக்கி லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. லாரியை விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தாலுகா முட்டத்தூர் கிராமத்தைச் சேர்ந்த குமரவேல் (வயது 49) என்பவர் ஓட்டிச் சென்றார்.

நேற்று விடியற்காலை 5 மணி அளவில் பொன்பாடி அருகே சென்னை- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரி டிரைவர் குமரவேல் படுகாயம் அடைந்தார். அவ்வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள் படுகாயம் அடைந்த குமாரவேலை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருத்தணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து திருத்தணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை