நாமக்கல்
ராசிபுரம் அருகேயுள்ள ப.மு. பாளையத்தில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய முயன்றபோது விஷவாயு தாக்கி தொழிலாளர்கள் சஞ்சய், முருகேசன் ஆகிய 2 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 3 பேர் கவலைக்கிடமாக உள்ளனர்.
கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய முயன்றபோது, விஷவாயு தாக்கி இருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.