தமிழக செய்திகள்

இருசக்கர வாகனம் மரத்தில் மோதி லாரி டிரைவர் பலி

இருசக்கர வாகனம் மரத்தில் மோதி லாரி டிரைவர் பலியானார்.

தினத்தந்தி

திருப்புவனம்

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தாலுகா, வேலங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் குமரவேல் (வயது 42). இவர் லாரி டிரைவராக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று சிவகங்கை மாவட்டம் பூவந்தியில் ஒரு திருமண நிகழ்ச்சிக்கு வந்துவிட்டு ஊருக்கு தனது இருசக்கர வாகனத்தில் திரும்பி வந்துள்ளார்.

மடப்புரம் விலக்கு அருகே எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் வரும்போது, இருசக்கர வாகனம் எதிர்பாராதவிதமாக நிலை தடுமாறி மரத்தில் மோதியது.

இதில் குமரவேலுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. குமரவேலை மீட்டு திருப்புவனம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு செல்லும் வழியில் இறந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து குமரவேல் மனைவி அமலா கொடுத்த புகாரின் பேரில், பூவந்தி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்