தமிழக செய்திகள்

தட்டச்சு தேர்வு தொடங்கியது

தட்டச்சு தேர்வு தொடங்கியது.

தமிழ்நாடு தொழில்நுட்பத்துறை நடத்தும் தட்டச்சு தேர்வு பெரம்பலூர் ஸ்ரீராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியில் நேற்று தொடங்கியது. இதில் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த தமிழ் மொழி ஜூனியர் கிரேடில் 154 மாணவ- மாணவிகளும், சீனியர் கிரேடில் 96 பேரும், ஆங்கில மொழி ஜூனியர் கிரேடில் 337 பேரும், சீனியர் கிரேடில் 221 பேரும் என மொத்தம் 808 பேர் பங்கேற்றுள்ளனர். முதல்நாள் ஜூனியர் கிரேடில் 3 குழுக்கள், சீனியர் கிரேடில் 2 குழுக்களுக்கு என மொத்தம் 5 குழுக்களுக்கு தேர்வு நடைபெற்றது. அறை கண்காணிப்பாளர்கள், தட்டச்சு தேர்வினை கண்காணித்தனர்.

2-வது நாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) தமிழ் மொழி ஜூனியர் கிரேடில் 82 மாணவ-மாணவிகளும், சீனியர் கிரேடில் 96 பேரும், ஆங்கில மொழி ஜூனியர் கிரேடில் 144 பேரும், சீனியர் கிரேடில் 170 பேரும், உயர்வேக தேர்வில் (ஹைஸ் பீடு) தமிழ் மொழி, ஆங்கில மொழியில் தலா ஒருவரும், தமிழ் மொழி பிரி ஜூனியர் கிரேடில் 2 பேரும், ஆங்கில மொழி பிரி ஜூனியர் கிரேடில் 11 பேரும் என மொத்தம் 507 பேர் தட்டச்சு தேர்வில் பங்கேற்க உள்ளனர், என்று மையத்தின் முதன்மை கண்காணிப்பாளரும், கல்லூரி முதல்வருமான ராஜசேகரன் தெரிவித்தார்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...