தமிழக செய்திகள்

டுவிட்டர் பக்கத்தில் விநாயகர் சிலையை பதிவிட்டது ஏன்? உதயநிதி ஸ்டாலின் விளக்கம்

டுவிட்டர் பக்கத்தில் விநாயகர் சிலையை பதிவிட்டது ஏன்? என உதயநிதி ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை,

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் விநாயகர் சிலையின் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு இருந்தார். சமூக வலைத்தளங்களில் மிகவும் பேசுபொருளாக இந்த விவகாரம் உருவெடுத்து.

இந்த நிலையில் இது குறித்து விளக்கம் அளித்துள்ள உதயநிதி ஸ்டாலின், சர்ச்சையும் அதன் உள்நோக்கமும் புரிகிறது. என் அம்மா வைத்து வழிபட்டது. கரையும்முன் மகள் விருப்பத்தின்பேரில் அவர் கைகளில் புகைப்படமானது, அவ்வளவே என்று தெரிவித்துள்ளார்.