தமிழக செய்திகள்

திண்டிவனத்தில் அனுமதி இன்றி வைத்த பட்டாசு கடைக்கு 'சீல்'

திண்டிவனத்தில் அனுமதி இன்றி வைத்த பட்டாசு கடைக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.

தினத்தந்தி

திண்டிவனம்

திண்டிவனம் பகுதியில் உள்ள கடைகளில் அரசு அனுமதி இன்றி பட்டாசு விற்பனை செய்வதாக வருவாய்த்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் வருவாய்த்துறையினர் திண்டிவனம் காந்தி சிலை அருகில் மருத்துவமனை ரோட்டில் உள்ள ஒரு கடையில் சோதனை செய்தனர். அப்போது அந்த கடையில் அரசு அனுமதி இன்றி பட்டாசு விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து வருவாய்த்துறை அலுவலர் டோமினிக் சேவியர், கிராம நிர்வாக அலுவலர் ராம்குமார் மற்றும் அதிகாரிகள் அங்கிருந்த பட்டாசுகளை பறிமுதல் செய்ததோடு, அந்த கடைக்கு சீல் வைத்தனர். தொடர்ந்து பட்டாசு விற்ற கடை உரிமையாளர் சுடலை முத்து மகன் தங்கதுரை (வயது 50) என்பவரை திண்டிவனம் போலீசார் கைது செய்தனர். 

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு

காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை