தமிழக செய்திகள்

மத்திய அரசை கண்டித்து ரெயில் நிலையத்தில் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசை கண்டித்து கும்மிடிப்பூண்டி ரெயில் நிலையத்தில் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடந்தது.

தினத்தந்தி

கும்மிடிப்பூண்டி ரெயில் நிலையத்தில் தட்சன ரெயில்வே தொழிற்சங்கத்தின் சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கு பொன்னேரி வட்ட செயலாளர் சூர்யபிரகாசம் தலைமை தாங்கினார். செயலாளர் தினேஷ் முன்னிலை வகித்தார். மதுரையில் இருந்து பிரயாக்ராஜ் வரை தனியார் நிறுவனம் மூலம் ரெயில்களை இயக்குவதை கைவிட வேண்டும். ரெயில்வே துறையை மத்திய அரசே முழுமையாக ஏற்று நடத்திட முன்வர வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் தொழிற்சங்க நிர்வாகிகள் பலரும் பங்கேற்றனர்.

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு

காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

சண்டிகாரில் காலிஸ்தானிய பயங்கரவாதிகள் பெயரில் 26 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

ஈரானை தாக்கும் அளவுக்கு அமெரிக்காவிடம் வலிமை இல்லை; அதனாலேயே... மத்திய கிழக்கு நிபுணர் பேட்டி

மராட்டியம் அர்ப்பணிப்புள்ள ஒரு தலைவரை இழந்து விட்டது: அஜித் பவார் மறைவுக்கு தெண்டுல்கர் இரங்கல்