கோப்புப்படம்  
தமிழக செய்திகள்

யு.பி.எஸ்.சி முதல்நிலை தேர்வு - ஏராளமான இளைஞர்கள் தேர்வில் பங்கேற்பு

தமிழகத்தில் யு.பி.எஸ்.சி. முதல்நிலை தேர்வில் ஏராளமானோர் பங்கேற்று தேர்வு எழுதி வருகின்றனர்.

தினத்தந்தி

சென்னை,

ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் உள்ளிட்ட 26 ஆட்சிப் பணிகளுக்கான தேர்வுகளை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்காணல் என மூன்று கட்டங்களாக தேர்வு நடத்தப்படுகிறது.

இந்நிலையில், நடப்பு ஆண்டுக்கான யு.பி.எஸ்.சி முதல்நிலை தேர்வு, நாடு முழுவதும் 75 இடங்களில் தொடங்கி உள்ளது. தமிழகத்தில் சென்னை, கோவை, திருச்சி, வேலூர் ஆகிய மாவட்டங்களில் ஏராளமான இளைஞர்கள் பங்கேற்று தேர்வு எழுதி வருகின்றனர்.

காலை, மாலை என இரண்டரை மணி நேரம் தேர்வு நடைபெறுகிறது. கடுமையான சோதனைக்கு பிறகே தேர்வர்கள், தேர்வு மையங்களுக்குள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து