தமிழக செய்திகள்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: 74,416 பேர் வேட்பு மனு தாக்கல்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 74,416 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தினத்தந்தி

சென்னை,

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஒரேகட்டமாக தேர்தல், பிப்ரவரி 19-ம் தேதி நடைபெற உள்ளது. பிப்ரவரி 22-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

கடந்த ஜனவரி 28-ம் தேதி தொடங்கிய வேட்புமனுத் தாக்கல் பிப்ரவரி நேற்றோடு (4-ம் தேதி) நிறைவடைந்தது. வேட்புமனு பரிசீலனை பிப்ரவரி 5 ஆம் தேதி நடைபெற்றது. வேட்புமனுக்களை திரும்பப் பெற பிப்ரவரி 7 ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 74,416 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மாநகராட்சி வார்டு - 14,701, நகராட்சி-23,354, பேரூராட்சி -36,361 வேட்பு மனுக்கள் பெறப்பட்டுள்ளன.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்