தமிழக செய்திகள்

பட்டியல் இனத்தவர்களுக்கான நிதியை மகளிர் உரிமைத்தொகை திட்டத்துக்கு பயன்படுத்துவதா? எடப்பாடி பழனிசாமி கண்டனம்

பட்டியல் இனத்தவர்களுக்கான நிதியை மகளிர் உரிமைத்தொகை திட்டத்துக்கு பயன்படுத்துவதா? எடப்பாடி பழனிசாமி கண்டனம்.

தினத்தந்தி

சென்னை,

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

பட்டியல் இனத்தவர்களுக்கு வழங்கக்கூடிய எஸ்.சி.எஸ்.பி. (பட்டியல் சாதிகள் துணைத் திட்டம்) நிதியில் இருந்து ரூ.1,560 கோடியை பொது மகளிர் மாதாந்திர திட்டத்துக்காக மாற்றி சமூகநீதிக்கு பெரும் பிழை இழைத்துள்ள இந்த தி.மு.க. அரசுக்கு எனது கண்டனங்கள்.

மேடைகளிலும், படங்களிலும் மட்டும் போலி சமூகநீதி பேசி வரும் இந்த அரசு, உண்மையில் பட்டியல் இன மக்களுக்கு இத்தகைய துரோகம் இழைத்திருப்பது, இவர்களின் உண்மை முகத்தை வெட்ட வெளிச்சமாக்கி இருக்கிறது.

பின்தங்கிய நிலையில் இருக்கும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த உதவும் நிதியை வேற்று பணிகளுக்கு மாற்றுவது பெரும் அநீதி. இந்த அரசு உடனடியாக எஸ்.சி.எஸ்.பி. நிதியை உரிய துறையில் ஒப்படைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு