தமிழக செய்திகள்

காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள்; அன்புமணி ராமதாஸ் விமர்சனத்திற்கு அப்பாவு பதிலடி

ஒரு பணியிடம் காலியாகும்போது உடனடியாக அங்கு மற்றொரு நபரை நியமனம் செய்துவிட முடியாது என அப்பாவு தெரிவித்தார்.

தினத்தந்தி

நெல்லை,

நெல்லையில் சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவரிடம், தமிழ்நாட்டில் பல கல்லூரிகளில் போதுமான அளவு ஆசிரியர்கள் இல்லை என்றும், சுமார் 9 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சித்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த அப்பாவு, ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பணிபுரியும் இடத்தில், 9 ஆயிரம் என்பதை பெரிய எண்ணிக்கை என்று சொல்லமாட்டேன். ஒரு பணியிடம் காலியாகும்போது உடனடியாக அங்கு மற்றொரு நபரை நியமனம் செய்துவிட முடியாது. அதற்கான நடைமுறைகள் இருக்கின்றன.

அந்த நடைமுறைகளின் அடிப்படையில்தான் வேலைக்கு பணியாளர்களை தேர்வு செய்ய முடியும். ஒவ்வொரு ஆண்டும் டி.என்.பி.எஸ்.சி., டி.ஆர்.பி., செட் தேர்வு உள்ளிட்ட பல நிர்வாக தேர்வுகள் மூலம் காலி பணியிடங்களை நிரப்புவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்று தெரிவித்தார்.  

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்