தமிழக செய்திகள்

மொரப்பூரில்வெறிநோய் தடுப்பூசி சிறப்பு முகாம்

தினத்தந்தி

மொரப்பூர்:

மொரப்பூர் அரசு கால்நடை மருந்தகத்தில் மாவட்ட கால்நடை பராமரிப்பு துறை சார்பில் இலவச வெறிநோய் தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது. கால்நடைத்துறை இணை இயக்குனர் டாக்டர் சுவாமிநாதன் தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தார். கால்நடைத்துறை உதவி இயக்குனர் டாக்டர் ராமகிருஷ்ணன், கால்நடை உதவி டாக்டர்கள் காந்திராஜன், கனகசபை ஆகியோர் முன்னிலை வகித்தனர். கால்நடை உதவி டாக்டர் வெற்றிவேல் வரவேற்று பேசினார்.

முகாமில் எம்.தொப்பம்பட்டி, மொரப்பூர், தாசரஅள்ளி, எலவடை ஆகிய ஊராட்சிகளை சுமார் 788 வளர்ப்பு நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி செலுத்தப்பட்டது. தடுப்பூசி செலுத்தும் பணியை மொரப்பூர் உதவி கால்நடை டாக்டர் வெற்றிவேல் தலைமையில் கால்நடை ஆய்வாளர் தனலட்சுமி, கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் ஆண்ட்ரூ, முருகன், மஞ்சு ஆகிய கொண்ட குழுவினர் செய்தனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து