தமிழக செய்திகள்

அரங்குளநாதா காவில் வைகாசி விசாக தேரோட்டம்

திருவரங்குளம் அரங்குளநாதர் கோவில் வைகாசி விசாக தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

தினத்தந்தி

அரங்குளநாதர் கோவில்

புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளத்தில் வரலாற்று புகழ்மிக்க சோழர் காலத்து பழம்பெருமை வாய்ந்த சுயம்புலிங்க அரங்குளநாதர் சமேத பெரியநாயகி அம்பாள் கோவில் வைகாசி விசாக திருவிழா கடந்த மாதம் 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலை இரவு வேளைகளில் காமதேனு, அன்னம், சிம்மம் வெள்ளி குதிரை, வெட்டுவான் குதிரை வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சுவாமி-அம்பாள் வீதி உலா நடைபெற்றது.

தேரோட்டம்

இதையடுத்து திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. பின்னர் சுவாமி-அம்பாள் பட்டாடை உடுத்தி, தங்க ஆபரணங்கள் சாற்றப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் திருத்தேர்களில் எழுந்தருளினர். பின்னர் காலை 10 மணிக்கு மேள தாளம் முழங்க திரளான பக்தர்கள் சிவ, சிவ... ஹர, ஹர... கோஷத்துடன் 2 தேர்களை வடம் பிடித்து இழுத்தனர்.

அப்போது சிவ பக்தர்கள் சிவபுராணம் பாடியவாறு தேர் முன்பாக சென்றனர். தேர் முக்கிய வீதிகள் வழியாக அசைந்தாடி வந்து கோவில் நிலையை 11.15 மணிக்கு வந்தடைந்தது. இதில் பக்தர்கள் ஆங்காங்கே கூடி நின்று சுவாமி-அம்பாளுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டனர். இதில் தேவஸ்தான அலுவலர்கள், திருப்பணி கமிட்டியினர், மண்டகபடிதாரர்கள், விழா குழுவினர், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்