தமிழக செய்திகள்

உலகளந்த பெருமாள் கோவிலில் வைகாசி விசாக உற்சவம்

திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் வைகாசி விசாக உற்சவம் வருகிற 29-ந் தேதி தொடங்குகிறது

தினத்தந்தி

திருக்கோவிலூர்

திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் வைகாசி விசாக உற்சவம் வருகிற 29-ந் தேதி தொடங்குகிறது.

கருட சேவை

ஆன்மீகத்தில் பிரசித்தி பெற்றதும், வரலாற்று சிறப்பு வாய்ந்ததுமான திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் வைகாசி விசாக ஸ்ரீ புஷ்பவல்லி தாயார் ஸ்ரீ ஜெகதீஸ் பெருமாள் பூச்சாற்று உற்சவம் வசந்தோற்சவமாக நடக்கிறது. இதையொட்டி வருகிற 29-ந் தேதி திங்கட்கிழமை விசேஷ அலங்காரம் மற்றும் சாற்றுமறையுடன் விழா தொடங்குகிறது.

தொடர்ந்து வருகிற 30, 31 மற்றும் ஜூன் 1-ந் தேதிகளில் சாமி புறப்பாடு மற்றும் மண்டகப்பாடி நிகழ்ச்சி நடக்கிறது. 2-ந் தேதி காலை 7 மணி அளவில் கருட சேவை புறப்பாடு நிகழ்ச்சியும் 11 மணியளவில் ஸ்ரீ புஷ்பவல்லிதாயார் சமேத ஸ்ரீ தேகளீச பெருமாள் மற்றும் நம்மாழ்வார் விசேஷ அலங்கார திருமஞ்சனம் மற்றும் சாற்றுமறை நிகழ்ச்சி நடக்கிறது. மேற்கண்ட 5 நாட்களிலும் மாலையில் ஆன்மிக சொற்பொழிவு, நாதஸ்வர கச்சேரியும் நடக்கிறது.

பூச்சாற்று உற்சவம்

பின்னர் 3-ந் தேதி(சனிக்கிழமை) முதல் 5-ந் தேதி வரை 3 நாட்களுக்கு ஸ்ரீ புஷ்பவல்லி தாயாருக்கு பூச்சாற்று உற்சவம் நடக்கிறது.

இந்த 3 நாட்களில் தினமும் மாலை 4 மணிக்கு ஸ்ரீ புஷ்பவல்லி தாயார் புறப்பாடாகி ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளுகிறார். மாலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை வேதபாராயணமும், இரவு 8 மணி முதல் 9 மணி வரை சாற்று மறை நிகழ்ச்சியும் நடக்கிறது.

விழா ஏற்பாடுகளை கோவில் மடாதிபதி ஜீயர் சாமிகள் உத்தரவின்பேரில் கோவில் நிர்வாகி கோலாகலன் என்கிற கிருஷ்ணன் மேற்பார்வையில் விழா குழுவினர்கள், உபயதாரர்கள் மற்றும் பக்தர்கள் முன்னின்று செய்து வருகின்றனர்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை