தமிழக செய்திகள்

வள்ளலார் முப்பெரும் விழா பேச்சுப்போட்டி

நெல்லையப்பர் கோவிலில் வள்ளலார் முப்பெரும் விழா பேச்சுப்போட்டி நடந்தது.

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் வள்ளலார் முப்பெரும் விழா பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி, ஓவிய போட்டி உள்ளிட்ட போட்டிகள் நெல்லையப்பர் கோவில் வளாகத்தில் நேற்று நடந்தது. இதில் 30-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரிகளை சேர்ந்த 300 மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். போட்டிகளை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் கவிதா பிரியதர்ஷினி தொடங்கி வைத்தார். இதில் வெற்றி பெற்றவர்களுக்கு 23-ந் தேதி பாளையங்கோட்டையில் நடைபெறும் விழாவில் பரிசுகள் வழங்கப்படும். இந்த நிகழ்ச்சியில் உதவி ஆணையர் கவிதா, நெல்லையப்பர் கோவில் செயல் அலுவலர் அய்யர் சிவமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT