தமிழக செய்திகள்

குன்றத்தூரில் இருந்து சபரிமலைக்கு சென்ற வேன் விபத்து- 10 பக்தர்கள் காயம்

குன்றத்தூரில் இருந்து சபரிமலைக்கு 20 பக்தர்களுடன் சென்ற வேன் விபத்துக்குள்ளானது.

தினத்தந்தி

விழுப்புரம்,

சென்னையில் இருந்து சபரிமலைக்கு 20 ஐயப்ப பக்தர்கள் சென்றுகொண்டிருந்தனர். அதிகாலை நேரத்தில் வேன் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே வந்துகொண்டிருந்தது.

அப்போது, ஓட்டுநரின் தூக்க கலக்கத்தால், கட்டுப்பாட்டை இழந்த வேன், சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில்10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். அவர்களுக்கு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு