தமிழக செய்திகள்

கால்நடை மருத்துவ முகாம்

திட்டை ஊராட்சியில் கால்நடை மருத்துவ முகாம் நடந்தது.

தினத்தந்தி

சீர்காழி:

சீர்காழி அருகே திட்டை ஊராட்சியில் மாவட்ட கால்நடை பராமரிப்பு துறை சார்பில் இலவச கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமிற்கு மாவட்ட உதவி இயக்குனர் ஈஸ்வரன் தலைமை தாங்கினார். திட்டை ஊராட்சி மன்ற தலைவர் பெரியசாமி வரவேற்றார். முகாமை உதவி இயக்குனர் ஈஸ்வரன் தொடங்கி வைத்து பேசினார். தொடர்ந்து கால்நடை டாக்டர்கள் ராமபிரபா, சேஷகிரி மற்றும் செவிலியர்கள் கொண்ட குழுவினர் சுமார் 200-க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தனர். இந்த முகாமில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், கால்நடை உரிமையாளர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி செயலர் அன்பரசன் நன்றி கூறினார்.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு