தமிழக செய்திகள்

எங்களை பகைத்துக் கொண்டால் ஆட்சியில் தொடர முடியாது - வெற்றிவேல் எம் எல் ஏ

எங்களை பகைத்துக் கொண்டால் ஆட்சியில் தொடர முடியாது என்று தினகரன் ஆதரவு அதிமுக பேரவை உறுப்பினர் வெற்றிவேல் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தினத்தந்தி

மேலூர்

மூன்றாக பிரிந்திருக்கும் அதிமுகவின் தினகரன் அணியைச் சேர்ந்த வெற்றிவேல் எம் எல் ஏ முதல்வர் எடப்பாடி தலைமையிலான ஆட்சி தொடர வேண்டுமானால் அவர்கள் அணியை பகைத்துக்கொள்ளக் கூடாது என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஜெயலலிதாவின் ஆட்சி தொடர வேண்டும் என்றுதான் நம்பிக்கை வாக்குக் கோரும் தீர்மானத்திற்கு ஆதரவளித்தோம். நாங்கள் நினைத்திருந்தால் ஓ பன்னீர் செல்வம் அணிக்கோ அல்லது திமுகவிற்கோ ஆதரவாக இருந்திருக்கலாம் என்றும் அவர் கூறினார்.

தினகரன் கூட்டியுள்ள மேலூர் கூட்டத்திற்கு வரும் தொண்டர்களே உண்மையான அதிமுக தொண்டர்கள் என அவர் தெரிவித்தார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்