சென்னை,
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
இந்தியக் குடியரசு துணைத்தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நாட்டின் முன்னேற்றத்திற்காக இடைவிடாது உழைத்துக் கொண்டிருக்கும் இந்தியக் குடியரசு துணைத்தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், நீண்ட ஆயுளோடும் பூரண உடல்நலத்தோடும் தனது மக்கள் பணியைத் தொடர வேண்டும் என எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.