தமிழக செய்திகள்

சுதந்திர தின விழாவை முன்னிட்டு திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் தீவிர கண்காணிப்பு

சுதந்திர தின விழாவை முன்னிட்டு திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

தினத்தந்தி

75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் முன்னேச்சரிக்கை நடவடிக்கையாக சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் ரெயில் நிலையங்களில் உள்ள குப்பைதொட்டிகள், பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளிட்டவைகள் மட்டுமல்லாது ரெயிலில் பயணிக்கும் பயணிகளின் உடைமைகளை மெட்டல் டிடெக்டர் வெடிகுண்டு கருவி மூலம் தீவிரசோதனை செய்து வருகின்றனர்.

சந்தேகப்படும் படியான பொருட்கள் இருந்தால் உடனடியாக திருவள்ளூர் ரெயில்வே பாதுகாப்பு படையினரிடம் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தினர். 75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு திருவள்ளூர்- அரக்கோணம் ரெயில் நிலையங்களில் பலத்த பாதுகாப்பு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து