தமிழக செய்திகள்

கிராம உதவியாளர்கள் ஆர்ப்பாட்டம்

அம்பையில் கிராம உதவியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தினத்தந்தி

அம்பை:

தமிழ்நாடு கிராம உதவியாளர்கள் சங்கம் சார்பில் அம்பை தாலுகா அலுவலக வளாகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில தலைவர் முத்தையா தலைமை தாங்கினார். துணைத் தலைவர் சண்முக சுந்தர பாண்டியன், நெல்லை மாவட்ட தலைவர் ஏ.நாராயணன், செயலர் ஏ.முருகன், பொருளாளர் முஹம்மது ரபீக் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். நாராயணன், ரபீக், முருகன் செல்லப்பாண்டியன், மாரியப்பன், சங்கரநாராயணன் கண்டன உரை ஆற்றினார்.

கிராம உதவியாளர்களின் பணி மாறுதல் உத்தரவை ரத்து செய்யவும், கிராம உதவியாளர்களை அவதூறாக பேசிய வட்டாட்சியர் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து