தமிழக செய்திகள்

கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்

கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு கிராம மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தினத்தந்தி

கோவில்பட்டி:

கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு தோணுகால் கிராம மக்கள் பா. இன்பராஜ், முன்னாள் பஞ்சாயத்து தலைவர் மாடசாமி தலைமையில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் நேர்முக உதவியாளர் இசக்கிராஜிடம் கொடுத்த கோரிக்கை மனுவில், எங்கள் நிலங்களுக்கு பெரியகுளம் கண்மாய் வாய்காலில் இருந்து தண்ணீர் பாய்ச்சி வருகிறோம். தற்போது இந்த நீர்வழி வாய்க்கால் தனிநபர் ஒருவர் நீர்வழி வாய்க்காலை அழித்துள்ளார்.

மேலும், குளத்துக்கும், கிணற்றும் வாய்க்கால் கிடையாது என்று கல்தூண் ஊன்றி, முள்வேலி அமைத்துள்ளார். தற்போது தண்ணீர் கிடைக்காமல் பருத்தி காய்ந்துவிட்டது. எனவே, மாவட்ட அளவையரை கொண்டு எங்களது நிலத்தை அளவீடு செய்து, வாய்க்கால் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு