தமிழக செய்திகள்

கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்

கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு கிராம மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தினத்தந்தி

கோவில்பட்டி:

கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு நடராஜபுரம், பசும்பொன் நகர் பகுதி மக்கள் நேற்று காலையில் கோரிக்களை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கோவில்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட 2-வது வார்டில் உள்ள பசும்பொன் நகர் மக்கள் நடராஜபுரம் தெரு வழியாகத்தான் பிரதான சாலைக்கு செல்ல வேண்டும். இந்த தெருக்களை இணைக்கும் பகுதியில் மூப்பன்பட்டி கண்மாய் தண்ணீர் செல்லும் ஓடை மீது அமைக்கப்பட்டு இருந்த பாலத்தை எந்தவித முன்னறிவிப்பு மின்றி, கடந்த 8 மாதங்களுக்கு முன்பு நகராட்சி நிர்வாகம் இடித்து அகற்றிவிட்டது. இதனால் இப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்த ஓடை மீது விரைவில் பாலம் கட்ட வேண்டும், இதே போல் பசும்பொன் நகரில் சாலை, வாறுகால், மின்விளக்கு வசதிகளும் ஏற்படுத்தி தர வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. பின்னர் கோரிக்கை மனுவை உதவி கலெக்டர் மகாலட்சுமியிடம் கொடுத்து விட்டு கலைந்து சென்றனர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு