தமிழக செய்திகள்

பராமரிப்பு பணி காரணமாக விழுப்புரம்-சென்னை கடற்கரை பயணிகள் ரெயில் பகுதி நேரமாக ரத்து

முண்டியம்பாக்கம் பணிமனையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் பயணிகள் ரெயில் பகுதி நேரமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

தினத்தந்தி

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-

சென்னை எழும்பூர்-விழுப்புரம் வழித்தடத்தில் உள்ள முண்டியம்பாக்கம் பணிமனையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை, நாளை மறுநாள் மற்றும் வருகிற 18 ஆகிய தேதிகளில் பயணிகள் ரெயில் பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது.

அதன்படி, தாம்பரத்தில் இருந்து காலை 9.45 மணிக்கு புறப்பட்டு விழுப்புரம் செல்லும் பயணிகள் ரெயில் பகுதி நேரமாக திண்டிவனம்-விழுப்புரம் இடையே ரத்து செய்யப்படுகிறது. அதே போல, விழுப்புரத்தில் இருந்து மதியம் 1.40 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் பயணிகள் ரெயில் பகுதி நேரமாக விழுப்புரம்-திண்டிவனம் இடையே ரத்து செய்யப்படுகிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து