தமிழக செய்திகள்

விழுப்புரம்-சென்னை கடற்கரை பயணிகள் ரெயில் பகுதி நேர ரத்து: தெற்கு ரெயில்வே

பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள உள்ளதால் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது

தினத்தந்தி

சென்னை,

தெற்கு ரெயில்வே சென்னை கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சென்னை எழும்பூர்-விழுப்புரம் வழித்தடத்தில் உள்ள திண்டிவனம் பணிமனையில் இன்று (புதன்கிழமை), 8 ஆகிய தேதிகளில் மதியம் 12.30 மணி முதல் மாலை 4 மணி வரையில் (3 மணி நேரம் 30 நிமிடம்) பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள உள்ளதால் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்விவரம் வருமாறு:-

தாம்பரத்தில் இருந்து இன்று (புதன்கிழமை), 8 ஆகிய தேதிகளில் காலை 9.45 மணிக்கு புறப்பட்டு விழுப்புரம் செல்லும் பயணிகள் ரெயில் (வண்டி எண்.66045), ஒலக்கூர்-விழுப்புரம் இடையே பகுதி நேர ரத்து செய்யப்படுகிறது.

விழுப்புரத்தில் இருந்து இன்று (புதன்கிழமை), 8 ஆகிய தேதிகளில் மதியம் 1.40 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் பயணிகள் ரெயில் (66046) ஒலக்கூர்-விழுப்புரம் இடையே ரத்து செய்யப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்