தமிழக செய்திகள்

பூண்டி நீர்தேக்கத்தில் உபரிநீர் திறப்பு; தயார் நிலையில் மீட்புப் படையினர்

நீரின் அளவு அதிகரிக்கக் கூடும் என்ற அச்சம் நிலவுவதால், தீயணைப்புத்துறையினர் மீட்புப் படகுகளோடு தயார் நிலையில் உள்ளனர்.

தினத்தந்தி

சென்னை,

பூண்டி நீர்த்தேக்கத்தில் இருந்து திறந்து விடப்பட்ட உபரிநீரால், சென்னையை அடுத்த மணலி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சாலைகள் மற்றும் குடியிருப்புகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. பூண்டி நீர்த்தேக்கத்தில் இருந்து திறந்து விடப்பட்ட உபரிநீர், கொசஸ்தலை ஆறு வழியாக மணலி புதுநகர் மற்றும் சடயங்குப்பம், பர்மா நகர் பகுதிகளுக்குள் புகுந்தது.

இந்த நிலையில் நீர்வரத்து மேலும் அதிகரித்துள்ளதால், சடயங்குப்பம் பகுதியை சுற்றிலும் வெள்ளநீர் தேங்கி தீவு போல் காட்சியளிக்கிறது. இதையடுத்து மேலும் நீரின் அளவு அதிகரிக்கக் கூடும் என்ற அச்சம் நிலவுவதால், தீயணைப்புத்துறையினர் மீட்புப் படகுகளோடு தயார் நிலையில் உள்ளனர். தொடர்ந்து மீட்புப் படையினர் அந்த பகுதிகளில் பாதுக்கப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து