தமிழக செய்திகள்

நீரோடைகளில் தண்ணீர் வரத்து குறைந்தது

நீரோடைகளில் தண்ணீர் வரத்து குறைந்தது.

தினத்தந்தி

ஸ்ரீவில்லிபுத்தூர். 

ஸ்ரீவில்லிபுத்தூருக்கு மேற்கே மேற்கு தொடர்ச்சி மலை உள்ளது. இங்கு உள்ள மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்ததால் தண்ணீர் வரத்து ஓடைகளில் பெருக்கெடுத்து கண்மாய் மற்றும் குளங்களுக்கு தண்ணீர் வருவது வழக்கம். தற்போது கோடை வெயில் அளவுக்கு அதிகமாக இருப்பதாலும், மழை இல்லாததால் மலைப்பகுதிகளில் உள்ள ஓடைகளில் நீர் வரத்து குறைந்துள்ளது.

மலையில் உள்ள ஓடை பகுதியில் தண்ணீர் வரத்து இருந்தால் வனவிலங்குகள் மலை அடிவாரப் பகுதிக்கு வருவது குறையும், தண்ணீர் வரத்து குறைந்தால் தண்ணீர் குடிப்பதற்கு வனவிலங்குகள் மலை அடிவாரப் பகுதியை நோக்கி படையெடுக்கும். இதனால் விவசாயம் பெருமளவு பாதிக்கும். இதன் காரணமாக விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். 

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்