தமிழக செய்திகள்

தர்பூசணி கிலோ ரூ.15-க்கு விற்பனை

தர்பூசணி கிலோ ரூ.15-க்கு விற்பனை செய்யப்பட்டது.

கந்தர்வகோட்டை ஒன்றியம் முதுகுளம் கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் அதிகளவில் தர்பூசணி சாகுபடி செய்து வருகின்றனர். தற்போது கோடை வெயில் அதிகமாக இருப்பதாலும், இஸ்லாமியர்கள் ரம்ஜான் நோன்பு இருந்து வருவதாலும் தர்பூசணி அதிகளவில் தேவைப்படுகிறது. இதனால் விவசாயிகளுக்கு நல்ல விலைக்கு தர்பூசணி விற்பனையாகி வருகிறது. 60 நாட்கள் கொண்ட இந்த தர்பூசணி விளைச்சல் ஏக்கர் ஒன்றுக்கு 15 டன் மகசூல் கிடைக்கிறது. கிலோ ரூ.12 முதல் ரூ.15 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனால் அதிக வருமானம் பெறக்கூடிய விவசாயமாக தர்பூசணி உள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்